ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா.
இவர் இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகியிருந்தார். பின் நடுவில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரிந்து இருந்த அவர்கள் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவான அவர் மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
இந்த நேரத்தில் ரம்பாவின் கணவர் இந்திரன் அவரது மனைவிக்கு சீமந்தம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.