களுகமுவ பகுதி ஆறு ஒன்றில் நீராடச் சென்று அதிக மதுபோதையில் யுவதியை நிர்வாணமாக படமெடுத்து கூத்தாடிய பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பிரதேச மக்களால் மடக்கிப்படிக்கப்பட்டு பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் மதுபோதையில் மாணவர்கள் இருந்தமைக்கான சாட்சி இல்லை என்பதால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இரண்டு மது போத்தலுடன் நீராடச் சென்ற மாணவர்கள் அங்கு கூச்சலிட்டு சக மாணவி ஒருவரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதனை கண்டி பிரதேசவாசிகள் அங்கு சென்று மாணவர்களை சுற்றிவளைத்து பின் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
அதன்பின் அங்கு வந்த பொலிஸார் புகைப்படம் எடுத்த கையடக்கத் தொலைபேசியை ஆற்றில் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.