கேரளாவில் பெய்துவரும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் மழை பெய்து வருவதால் மாநிலமே வெள்ளக்காடு போல் காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் திருவன்னதபுரத்தில் உள்ள நடிகர் ப்ரித்திவிராஜின் வீடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகின்றனர்.
இதுவரை பல சினிமா நட்சத்திரங்கள் – சூர்யா, கமல், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட வெள்ள நிவாரணத்திற்காக தொகைவழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.