சென்னை வளசரவாக்கம் பகுதியில் மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இந்த குழந்தையை சின்னத்திரை நடிகை கீதா என்பவர் தான் உயிருடன் மீட்டார். குழந்தையை காப்பாற்றிய அவர் வெந்நீரில் குளிப்பாட்டி பின் காவல் துறையினர் உதவியுடன் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சேர்த்தார்.
நடிகை கீதா தற்போது, தனது மகளுக்கு திருமணமாகி 7 வருடங்களாக குழந்தை இல்லாததால் இந்த குழந்தையை தானும் தனது மகளும் வளர்க்க ஆசைப்படுவதாகவும், தங்களுக்கு குழந்தை கிடைக்குமேயானால் அதை நல்ல முறையில் வளர்ப்பதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.