பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் நடத்தும் வாக்கெடுப்பில் நடந்துள்ள மோசடி பற்றி புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தீப்தி என்ற போட்டியாளருக்கு ஆதரவாக போலியான வாக்குகள் பதிவிட Ram IT soultions என்ற நிறுவனம் பணம் பெற்றுக்கொண்டு செயல்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதனால் தீப்தியை ரெட் கார்டு காட்டி வெளியேற்றவேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் பிரச்னை செய்து வருகின்றனர்.
இருப்பினும் அந்த நிறுவனம் தொடர்ந்து அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.