இந்த நிலையில், நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
அதேசமயம், போலீசுக்கு பயந்து நிலானி தலைமறைவானதாகவும், அவரது செல்போன் சுவிட்ஸ்ஆப் செய்து வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்றும், காந்தி தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் மனு அளித்தார். மேலும் காந்தி தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும், கூறினார்.
ஆனால், நிலானியின் இந்த குற்றச்சட்டை காந்தியின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் மறுத்துவந்தனர். நிலானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். நிலானியும், காந்தியும் குடும்பம் நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், நடிகை நிலானி இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவர் கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.