இந்திய சினிமாவில் இருக்கும் பெண்கள் இப்போது ஒரு விஷயம் குறித்து தைரியமாக பேச தொடங்கியுள்ளனர்.
சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று அவர்கள் எத்தனை பேரிடம் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளார்கள் என்ற விவரங்களை கேட்கும் போது மனம் பதறுகிறது. தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி தான் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து கூற மற்ற சினிமா பிரபலங்களும் தைரியமாக இப்போது வெளியே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
இதையெல்லாம் பார்த்த தொகுப்பாளினி பாவனா, MeTooIndia டாக்கில் இப்போது தான் பெண்கள் தைரியமாக பேச வெளியே வருகின்றனர். இதை பார்க்கும் போது நான் வேலை செய்த விஜய் தொலைக்காட்சி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இருப்பவர்களுக்கு நன்றி, நான் அப்படி ஒரு துன்பத்தை அனுபவிக்காமல் நிம்மதியாக வேலை செய்தேன் என பதிவு செய்துள்ளார்.