நடிகவேள் என்று புகழப்பட்ட எம்ஆர் ராதாவின் பிறந்த நாளையொட்டி நடிகவேளின் ராஜபாட்டை என்ற புதிய நிகழ்ச்சியை புதுயுகம் தொலைக்காட்சியும் ராதிகாவின் ராடன் நிறுவனமும் நடத்தின.
நடிகவேள் எம்ஆர் ராதாவின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் வகையில் அவர் நேசித்த நாடகக்கலையை மைய்யமாக வைத்து தமிழகம் முழுவதும், நாடகப்போட்டி நடத்தி சிறந்த 3 அணிகளுக்கு தலா 100,000, 75,000 மற்றும் 50,000 ரொக்கம் பரிசளித்தனர்.
மிகப்பெரிய அளவில் நடந்த இந்த இறுதிபோட்டிக்கு இயக்குநர் கே பாக்யராஜ் , நடிகை ஸ்ரீபிரியா, நடிகைராதிகா சரத்குமார், மற்றும் கிரேஸி மோகன் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த அணியை தேர்வு செய்தனர்.
பிரம்மாண்டமான மேடையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சரத்குமார், பார்த்திபன், சிவகார்த்திகேயன், ராதாரவி, ராம்கி, நடிகைகள் பி சரோஜாதேவி, நிரோஷா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் கே.ஸ்.ரவிகுமார், விக்ரமன், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை பரத் மற்றும் நீலிமா ராணி தொகுத்து வழங்கினர். விரைவில் புதுயுகம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.