நடிகர் பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் இடையே இருந்த சண்டை பற்றி அனைவருக்கும் தெரியும். பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக சென்ற அவர்கள் ஒருவழியாக சமரசம் ஆனார்கள்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் பாலாஜியின் அம்மா வந்திருந்தார். அவர் பேசும்போது “பாலாஜி-நித்யா சண்டை அவர்கள் பர்சனல் விஷயம். நான் எதுவும் தலையிடமாட்டேன்.
நித்யாவை நான் மருமகளாக நினைக்கவில்லை.. மகள். எனக்கு ஒரு மகன்-ஒரு மகள்” என கூறியுள்ளார்.