சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மக்களின் சொந்த வாழ்க்கை பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக இது அமைந்தது.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தற்போது சென்னை அம்பத்தூர் காவல் துறை இணை ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.
இதில் அவர் சென்னை ஐயப்பன் தாங்கலில் இருக்கும் பிரிஸ்டீஜ் வில்லா விஸ்தா அப்பார்ட்மெண்ட்டில் நான் வசித்து வருகிறேன். இதில் 1300-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளது.
இங்கே சிலர் போலியான அசோசியேஷன் ஏற்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து வருகிறார்கள். அதை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக என்னை தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார்கள்.
என் சொந்த வாழ்க்கை பற்றியும், என் சினிமா நடிப்பு தொழில் பற்றியும் கேவலமாக பொது வெளியில் பேசுவதோடு, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டும் வருகின்றனர். சம்பந்தபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.