தமிழ் சினிமாவில் வடசென்னை, சண்டக்கோழி 2 படங்கள் இந்த வாரம் வெளியாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நடக்கும் MeToo பிரச்சனை குறித்து யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
சின்மயி, வைரமுத்து மீது பாலியல் குற்றம் சாட்டியது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. இப்போது மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் மருமகள் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் பிரபல இசை தொலைக்காட்சியில் பணியாற்றிய போது இளம் பெண்ணிற்கு தொல்லை கொடுத்ததாகவும், இதுபற்றி 10 வருடத்திற்கு முன்பே பல மேடைகளில் பேசியிருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.