ஹிந்தி சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் பிரபல நடிகை தீபிகா படுகோன். இவரை பற்றி வராத சர்ச்சைகள் இல்லை என சொல்லலாம். அவரின் மேனேஜர் அனிர்பன் தாஸ். அண்மையில் நாடு முழுக்க Me Too என்ற ஹேஷ் டேக்கில் பலர் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறார்கள்.
இதில் அனிர்பன் தாஸ் சிக்கியுள்ளார். இவர் தீபிகா படுகோன், ரன்பீர் கபூர் போன்ற பிரபலங்களுக்கு மேனேஜராக இருப்பவர். அதுமட்டுமல்ல தீபிகா நடத்தி வரும் லிவ் லவ் லாப் என்ற மனநல விழப்புணர்வு அமைப்பிலும் அவர் முக்கிய பொறுப்பு ஆற்றிவருகிறாராம்.
இந்நிலையில் அவர் மீது தொடர்ந்து வந்த பாலியல் குற்றச்சாட்டுகள் வர இணை நிறுவனராக இருந்த இவரை பதவி விலக கோரி பலறும் கூறியிருக்கிறார்கள்.
இதனால் அனிர்பன் நவி மும்பையில் உள்ள வாஷி என்னுமிடத்தில் ஆற்றுப்பாலத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட போலிசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளனர்.