விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை ‘தெறி’, ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்பட்டத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.
மெர்சல் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்ற இருக்கிறார்கள். மேலும் இந்த படத்திற்கு ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பும் வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.