தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் வெளிவந்த செக்கச்சிவந்த வானம் உட்பட பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார்.
அவருக்கு முன்னணி இயக்குனர்களே பலரும் தேடிச்சென்று வாய்ப்பு வழங்குகின்றனர். அது ஏன் என ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
“விஷயம் இல்லாமல் இயக்குநர்கள் என்னைத் தேர்வு செய்ய மாட்டார்கள். என் உடலில் சிவப்பு நிறம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் தமிழ் முகம். நம் மனசில் கருப்புதான் அழகு என்று பதிந்துள்ளது. அதற்காக கூட என்னை அவர்கள் தேர்வு செய்திருக்கலாம்,” என அவர் கூறியுள்ளார்.