தனது உரிமையாளருக்காக நடுரோட்டில் காத்திருக்கும் அந்த நாயின் புகைப்படம் 1.4 மில்லியன் பேரால் ஆன்லைனில் பார்க்கப்பட்டுள்ளது.
அதன் உரிமையாளர் ஆகஸ்டு 21 ஆம் திகதி மரணமடைந்தார். அன்றிலிருந்து அந்த நாய் தினமும் நடுரோட்டில் வந்து காத்து கிடக்கிறது.
சிலர் அந்த நாய்க்கு உதவ முன்வந்தனர். ஆனால் அந்த நாய் ஓடி விடுகிறது என டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.
“ஓட்டுநர்கள் அந்த சின்ன நாய்க்கு உணவு வழங்க முயற்சிகின்றனர் ஆனால் அது ஓடி விடுகிறது.”
“அவரின் உரிமையாளருக்கும் அந்த நாய்க்குமான உறவு மிகவும் ஆழமானது. உரிமையாளர் கொல்லப்பட்டதும் அந்த நாய் தினமும் தெருவில் வந்து நிற்க தொடங்கியது.”
“ஒவ்வொரு நாளும் இது தெருவில் வந்து நிற்கும்போது மனிதர்களுக்கும் நாய்களுக்கும் உள்ள உறவை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.” என்கிறார் அந்த டாக்ஸி ஓட்டுநர்.
இந்த நாய் தெரிவில் தன் உரிமையாளருக்காக காத்திருக்கும் வீடியோ நவம்பர் 10 ஆம் திகதி அன்று படம் பிடித்து சீனாவில் டிவிட்டர், பேஸ்புக்கிற்கு பதிலாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான சின வெய்போவில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் நாயின் விசுவாசத்தை கண்டு அனைவரும் நெகிழ்ந்து வருகின்றனர்.
“இந்த நாய்குட்டி மிகவும் விசுவாசமானதாக உள்ளது. என் குடும்பத்திலும் நாங்கள் ஒரு நாய் வளர்த்தோம் அது எங்களுக்காக தினமும் காத்திருக்கும்” என்று வெய்போ பயன்படுத்துபவர் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் அந்த நாய் குறித்த தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்.
“இந்த நாய்குட்டி நடுரோட்டில் நிற்பது அதற்கு பாதுகாப்பில்லை. யாராவது நல்ல மனிதர் அதனை தத்தெடுத்து அதனை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுங்கள்” என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
1920 களில் ஜப்பானில் ஹசிகோ என்ற நாய் ஒன்று தனது உரிமையாளருக்காக தினம் ரயில் நிலையத்தில் வந்து காத்திருக்கும். உரிமையாளர் மறைந்த பிறகும் 9 ஆண்டுகளாக அந்த நாய் அவருக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தது. ஹசிகோவிற்கு ஜப்பானில் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.