நடிகை நயன்தாரா கேரளாவில் இருந்து வந்த தமிழ் சினிமாவிலேயே தஞ்சமடைந்து விட்டார். கோலிவுட் சினிமாவின் நம்பர் 1 ஹீரோயினான அவருக்கு லேடி டான், லேடி சூப்பர் ஸ்டார் என பெயர்களை ரசிகர்கள் கொடுத்து விட்டார்கள்.
அண்மையில் கேரளாவில் வெள்ளம் புகுந்து பெரும் சேதங்களை உண்டாக்கியது. இதற்கு மலையாள சினிமா நடிகர்களும், நடிகைகளும் நிதியுதவி செய்தார்கள். தமிழ் சினிமா பிரபலங்கள் நிவாரண நிதி அளித்துள்ளார்கள்.
சேதம் அதிகம் என்பதால் இன்னும் மக்களுக்கு உதவ மலையாள சினிமா பிரபலங்கள் டிசம்பர் 7 ம் தேதி அபுதாபியில் நட்சத்திர கலைவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். இதன் கலெக்ஷன் அந்த மக்களுக்கு தானாம்.
மோகன் லால், மம்முட்டி, துல்கர் சல்மான், நிவின் பாலி, பிருதிவிராஜ் என பல பிரபலங்களுடன் நயன்தாராவிற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். அவர் கலந்துகொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.