கேரளாவில் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஸ்வதி பாபு. 22 வயதான இவர் துணை நடிகையாக பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அஸ்வதியிடம் எக்ஸ்டசி போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்க அவரை கண்கானித்து வந்துள்ளனர். போலீசார் நேற்று அஸ்வதியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்பொழுது பல லட்சம் மதிப்புள்ள எக்ஸ்டசி போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அஸ்வதியும் அவரது கார் ஓட்டுனரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்வதியிடம் பல லட்சம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் மல்லுவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.