அஜித்தின் விஸ்வாசம் படம் நாளை ரிலீஸ். ரசிகர்கள் தங்களது ஆசை நாயகனை நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் பார்க்க இருப்பதால் படு கொண்டாட்டத்தில் உள்ளனர்.
நாளை திரையரங்குகள் முழுவதும் எப்படிபட்ட கொண்டாட்டமாக இருக்க போகிறதோ என்று எதிர்ப்பார்ப்பில் அனைவரும் உள்ளார்கள். இந்த நேரத்தில், கடன் பிரச்சனையால் பைனான்சியர் உமாபதி கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தை திரையிட கூடாது என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கிற்கு தயாரிப்பு நிறுவனம் பதில் கொடுத்துள்ளனர். ரூ.78 லட்சம் கடன் பாக்கியில் ரூ.35 லட்சத்தை இன்றே வழங்குவதாகவும், மீதி தொகையை 4 நாட்களில் வழங்க உத்தரவாதம் அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
இந்த பிரச்சனையின் முடிவு பிற்பகலில் தெரிய வரும் எனப்படுகிறது.