சுவருக்காக சண்டை நடந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகையின் பூர்வீகம் கேரளாவாம். ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாமே துபாய் தானாம். கைவசம் சொல்லும்படியான படங்களை நாயகி வைத்திருக்கிறாராம். தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
படப்பிடிப்பு இல்லையென்றால் நாயகி வெளிநாட்டுக்கு பறந்து விடுகிறாராம். அவருடைய வெளிநாட்டு பயணம் மர்மமாக இருப்பதாக ஒரு தயாரிப்பு நிர்வாகி கூறினாராம்.
“அந்த பயணத்தில் மர்மம் எதுவும் இல்லை. அந்த நடிகைக்கு வெளிநாட்டு நண்பர்கள் அதிகம். அவர்களை சந்திக்கவே நாயகி வெளிநாடு செல்கிறார் என்று சக நடிகர் ஒருவர் அதனை தெளிவுபடுத்தியிருக்கிறாராம்.