சுமார் 735 கோடி மக்கள் வாழும் இந்த உலகில் வெறும் 100-க்கும் குறைவான குழந்தைகளே ‘ப்ரோகேரியா’ என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினம் தினம் நரக வாழ்க்கை வாழும் அந்த 100 பேரில் ஒருவர்தான் ரோச்சல் போண்டேர்.
பிலிப்பைன்ஸ் தீவில் வாழும் ஒரு விவசாயியின் 6 குழந்தைகளில் ஒருவராக பிறந்த ரோச்சலுக்கு 5 வயதாகும் போதுதான் அந்த கொடூரம் அரங்கேறியது. திடீரென ரோச்சலின் தோல் சுருங்கிப் போகவே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ப்ரோகேரியா எனப்படும் குறைந்த வயதிலேயே அதிக தோற்றமுள்ளவர்களாக மாற்றும் கொடிய நோய் இருப்பதை தெரிவித்தனர்.
இதனால் அவரது உடலில் செல், திசு, உடல் உறுப்புகள் என்று அனைத்தின் வளர்ச்சியும் நின்றுவிட்டதாகவும், அவர் 15 வயதுக்குள் இறந்து விடுவார் என்றும் தெரிவித்தனர். வறுமையில் வாடிய ரோச்சலின் தந்தைக்கு இது பேரிடியாக இருந்தது.
ஆனால் தன்னம்பிக்கை நிறைந்த ரோச்சலோ, கிழவி போன்ற தோற்றத்தினால் பயந்து வீட்டிலேயே முடங்கி இருக்காமல் தன் அப்பா நடத்தும் காய்கறி கடைக்குச் சென்று தொழிலை கவனித்துக் கொண்டார். இவ்வளவு ஏன் பள்ளியில் கூட சேர்ந்து படிக்கத் தொடங்கி விட்டார். “பள்ளியில் இருக்கும்போதுதான் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். நான் பயந்தது போல் இல்லாமல், அவர்கள் என்னை ஏற்றுக் கொண்டனர். அதற்காக கடவுள் அவர்கள் மீது கருணை காட்டட்டும்.” என்கிறார் மனதளவிலும் பெரிய மனுஷியான ரோச்சல்.
இப்போது 144 வயது மூதாட்டியின் தோற்றத்தில் இருக்கும் 18 வயதான இந்த இளம்பெண்ணைப் பற்றிய வீடியோ: