தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நாயகியாக ஒரு ரவுண்டு வந்த நடிகை, நடிகருடனான திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலகினாராம்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் அந்த நடிகை தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடிக்கிறாராம்.
தற்போது நாயகியின் கைவசம் ஒருசில படங்கள் உள்ளதாம். நாயகியை அறிமுகம் செய்துவைத்த இயக்குநர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம். அவர் தான் நடிக்கும் படத்தில் நடிக்க கேட்டதாகவும், நடிகை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நாயகி ஏற்கனவே படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் தான் நாயகி மறுத்துவிட்டாராம். இருந்தாலும் நாயகியை அறிமுகம் செய்து புகழை தேடித் தந்த இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டாமா என்று பேசுகிறார்களாம்.