இசைஞானி இளையராஜாவிற்கு அடுத்து ரசிகர்களை தன் இசையால் அதிகம் கட்டிப்போட்டவர் ஏ.ஆர். ரகுமான். இவரது இசையில் அடுத்து விஜய் – அட்லீ இணைந்திருக்கும் புதிய படத்தின் பாடல்கள் தான் வெளியாக இருக்கிறது.
அண்மையில் ஏ.ஆர். ரகுமானின் ஆஸ்கர் விருது தினத்தை மும்பையில் ஒரு நிகழ்ச்சி மூலம் கொண்டாடப்பட்டது. அதில் ரகுமானின் மகள் கலந்துகொண்டு தனது அப்பா பற்றி நெகிழ்ந்து பேசினார், ஆனால் ஒரு சர்ச்சையும் ஆனது. முகத்தை முழுவதும் மூடியபடி அவர் நிகழ்ச்சிக்கு வந்தது பிரச்சினை ஆனது.
இந்த நேரத்தில் ஏ.ஆர். ரகுமான் முதன்முதலாக தனது இரண்டு மகள்கள் மற்றும் மனைவி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.