ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இப்படம் தயாரிக்கப்படுகிறது.
புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சனா யாடிரெட்டி இயக்கும் இந்தப்படம், ஐ.பி.எல். மற்றும் கிரிக்கெட் வீரரைப் பற்றிய கதைக்கருவை மையமாகக் கொண்டு உருவாகிறது.
கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் நடிக்க உள்ள இப்படம் செப்டம்பரில் தொடங்கி 6 மாதத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டிருப்பதாக யாடி ரெட்டி இன்று தெரிவித்தார். இப்படம் 14 இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
தென்னிந்தியாவில் தனக்கு இது முதல் படம் என்று கூறிய ஸ்ரீசாந்த், இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிப்புத்துறையில் நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருப்பதாக கூறுகிறார்.