பாலிவுட்டில் கார், பைக் மற்றும் பேஷன் ஷோக்களில் முன்னணி மாடலாக இருப்பவர் கரண் ஓபராய். இவர் டி.வி. தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் மீது இளம் பெண் ஒருவர் மும்பை ஓஷிவாரா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தன்னைக் கற்பழித்ததோடு நில்லாமல் அதை வீடியோவும் எடுத்து தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் அப்படிப் பணம் தராவிட்டால் அந்த வீடியோவை வலைதளங்களங்களில் வெளியிடப்போவதாக மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கரண் ஓபராயை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.