பிஸியான சினிமா நடிகைகளுள் ஒருவராக சேர்ந்துள்ளார் 19 வயதான இளம் யாஷிகா ஆனந்த். 2016ல் கவலை வேண்டாம் படத்தில் அறிமுகமானவர் பின்னர் துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.
தற்போது கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜோம்பி, பிக் பாஸ் வெற்றியாளர் ஆரவின் ராஜபீமா, பிக்பாஸ் மகத்துடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.
இவர் டுவிட்டரில் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது ஒரு ரசிகர் உங்களுக்கு அரசியல் ஆர்வம் எப்படி, அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி கேட்டனர்.
அதற்கு, அது என்னுடைய நடிப்பு வாழ்க்கையையும் வாய்ப்பையும் பொறுத்தது. எனக்கு வயதான பின்னர், எனக்கு அரசியலில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்.