செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ காற்று மற்றும் தண்ணீர் உள்ளதா? அங்கே மனிதனால் வாழ முடியுமா? செவ்வாயில் மனிதர் போன்ற உயிர்கள் ஏதேனும் வாழ்கிறதா? என்கிற பலநூறு கேள்விகள் எழுகின்றன. இதுதொடர்பான ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்திவரும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ரோபோ அனுப்பும் புகைப்படங்கள் இந்த ஆய்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில், கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தின் பள்ளங்களை சமீபத்தில் ஆய்வு செய்து புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பியிருந்தது. அதில், ஒரு படத்தில் கருப்பான பெண் நிற்பதுபோல தோற்றம் தெரிகிறது என யு.எஃப்.ஓ சைட்டிங்ஸ் டெய்லி என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அது கைகளோடும் நீளமான முடியோடும், கைகள் சற்று வெளிர் நிறமாக இருப்பதாகவும், ஆகையால் அது பெண்ணாக இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உருவம் 8 முதல் 10 செ.மீட்டர் உயரமுள்ளதாகவும் கியூரியாசிட்டி ரோவரை உற்று கவனிப்பது போலவும் அந்த படத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறது. இது உலகம் கவனித்து பார்க்க வேண்டிய விவகாரம் என்றும் அந்த இணையதளத்தில் கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல், ஏலியனைப் போல் தோற்றமளிக்கும் நண்டு ஒன்றின் புகைப்படமும் சமீபத்தில் வெளியானது, குறிப்பிடத்தக்கது.