சென்னையில் இன்று சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை அதேபோல் புறநானூறு புதிய வரிசை நூலை எழுதியதால் சாலமன் பாப்பையாவுக்கு பெருமை. இதனை இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டும். மேலும் காலம் எப்போதும் பேசாது ஆனால் அது அனைத்துக்கும் பதில் சொல்லும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.