பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. இந்த வார இறுதியில் முதல் எவிக்சன் இருக்கும் என்பது தெரிந்துவிட்டது. யார் வெளியேறப்போகிறவர்கள் என்ற எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.
வீட்டில் சண்டை, சச்சரவுகள் என பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதே வேளையில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள முகேன், தர்ஷன், லொஸ்லியா மீது பலருக்கும் ஈர்ப்பு உள்ளது.
ஓவியாவுக்கு அடுத்தபடியாக லொஸ்லியா ஆர்மி மிகவும் பிரபலமாகிவிட்டது. ரசிகர்களின் எண்ணிக்கையும் இதில் அதிகமாகிவருகிறது. அவருக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்துகொண்ட பொன்னம்பலம் லொஸ்லியாவுக்கு தான் உலகளவில் ஆதரவுகள் இருக்கிறது என்பதை நிச்சயம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உலக நாடுகளில் இருக்கும் அத்தனை இலங்கை தமிழர்களும் அவருக்கு ஓட்டு போடுவார்கள்.
இறுதியில் 4 போட்டியாளார்களில் ஒருவராக இருப்பவார் என கூறியுள்ளார்.