பருத்திவீரன் என்ற படம் மூலம் தமிழ் மக்களின் கவனத்திற்கு அதிகம் வந்தவர் சரவணன். இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.
இவரது முதல் மனைவி சூர்யா தனது கணவர் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் என்னை காதலித்து திருமணம் செய்தார். நான் எவ்வளவோ சிகிச்சை பெற்றும் எங்களுக்கு குழந்தை இல்லை. அவரது குடும்பத்தினர் திடீரென இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தினர்.
நானும் அவரது நல்லதுக்காக அந்த திருமணத்தை நடத்தி வைத்தேன். இப்போது அவருக்கு குழந்தை உள்ளது, ஆனாலும் எனது கணவர் மீது எனக்கு அவ்வளவு பாசம் உள்ளது, அவர் மிகவும் நல்லவர் என பேட்டி கொடுத்துள்ளார்.