நடிகர் சங்க தேர்தல் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு கடந்த மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றது.
இதில் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன.
1604 ஓட்டுக்கள் பதிவான இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்குமாறு விஷால் தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளதால், விஷால் தரப்பு வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும் வாக்கு எண்ணிக்கைக்கான திகதியையும் தற்போது அறிவிக்க முடியாது என கூறி வழக்கை வருகிற வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர். இதனால் நடிகர் சங்க தேர்தல் முடிவு எப்போது என்பது வரும் வெள்ளிக்கிழமைக்கு பின்பே தெரியவரும்.