ஆப்ரிக்காவுக்கு வெளியே நவீன மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிரீஸில் கண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த எச்சங்கள் 210,000 ஆண்டுகளுக்கு முந்தியவை. அந்த சமயத்தில் ஐரோப்பா நியாண்டர்தால் மக்களால் நிரம்பி இருந்தது.
ஆப்ரிக்காவில் இருந்து மனிதர்கள் வெளியிடங்களில் குடியேறினார்கள் என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.
ஆனால், அந்த தடயங்கள் எதுவும் இப்போதைய மனிதர்களிடம் இல்லை. இந்த ஆய்வு முடிவு நேச்சர் சஞ்சிகையில் பிரசுரமாகி உள்ளது.