பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் மூன்றாவது சீசன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் விரைவில் தெலுங்கிலும் துவங்கவுள்ளது.
அதற்கான போட்டியாளர் தேர்வு நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில் நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி பற்றி பிரபல தெலுங்கு டிவி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி அதிர்ச்சி புகார் ஒன்றை கூறியுள்ளார்.
பிக்பாஸ் வாய்ப்பு என்னை தேடி வந்தது. நான் உடனே ஏற்றுக்கொண்டேன். ஆனால் அந்த நிகழ்ச்சி co-ordinator எனக்கு போன் செய்து ´உங்களை போட்டியாளராக தேர்வு செய்வதால் எனக்கு என்ன லாபம்´ என கேட்டாராம். அவர் என்ன அர்த்தத்தில் பேசுகிறார் என புரிந்ததும், ஸ்வேதா ரெட்டி பிக்பாஸே வேண்டாம் என முடிவெடுத்துவிட்டாராம்.