ரஜினியுடன் கபாலி படத்தில் ஜோடி போட்டதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் பல முன்னணி நடிகைகளே தயங்கும் கேரக்டர்களை அசால்ட்டாக செய்துவரும் இவரது சமீபத்திய பேட்டி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் கூறுகையில், ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார். தினமும் ஒவ்வொருவருடன் இருப்பது என்பது தினமும் மாறக் கூடிய விஷயம் என்ற அவர் அது கட்டாயமாக இருக்க வேண்டிய விஷயம் இல்லை.
அப்படிப்பட்ட வாய்ப்பு ஒவ்வொரு நாளும் தனக்கு தேவைப்படுகிறது என்று படு துணிச்சலாக பேசியுள்ளார், நடிகை ராதிகா ஆப்தே.
ராதிகா ஆப்தே, பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்துள்ளார். கட்டிய கணவர் இருக்கும் போதே தனக்கு இப்போதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் இருக்க வேண்டும் என ராதிகா ஆப்தே கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.