கடந்த வாரத்தில் டாஸ்க் ஒன்றை நிராகரித்ததற்காக சேரனுக்கும் போலீஸாக இருந்து இறந்ததால் கவினுக்கும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆனால் இதில் சேரனின் தண்டனையை தானே ஏற்று கொள்வதாக லொஸ்லியா தாமாக முன் வந்து அப்போதே கூறியிருந்தார்.
இந்நிலையில் கமல் இதற்கான காரணத்தை தற்போது லொஸ்லியாவிடம் கேட்டபோது, முதலில் எனது இந்த தண்டனை அப்பா சேரனுக்காக. ஏனெனில் இந்த டாஸ்க்கில் எனக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை.
ஆனால் அனைவருக்கும் சந்தேகம் வருவதற்காக நானும் மதுமிதாவும் சும்மா பாட்டிலை வைத்து அனைவர் மீதும் தடவுவது போன்று இருந்தோம். ஆனால் இறுதியில் நடந்தது வேறு.
எனது இந்த செயலால் யாராவது பாதிக்கப்பட்டார்களோ இல்லையோ, ஆனால் நான் செய்த இந்த விளையாட்டுத்தனம் தவறாக புரிந்திருக்க வாய்ப்புண்டு என்பதால், நான் சிறைக்கு செல்ல முடிவெடுத்தேன் என கூற பார்வையாளர்களின் கரகோஷத்தால் அரங்கமே நிரம்பியது.
கமலும் லொஸ்லியாவின் காரணத்தை கேட்டு வெகுவாக பாராட்டினார்.