சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ´36 வயதினிலே´ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்து ´மகளிர் மட்டும்´, ´நாச்சியார்´, ´செக்கச்சிவந்த வானம்´ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார்.
அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த ´ராட்சசி´ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக ´குலேபகாவலி´ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ´ஜாக்பாட்´ படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தையும் சூர்யா தயாரிக்கிறார். இப்படத்தை ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்குகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு ´பொன்மகள் வந்தாள்´ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.