தெலுங்கில் முன்னணி நடிகராகி விட்ட விஜய் தேவரகொண்டா நோட்டா படத்தை தொடர்ந்து தமிழில் டியர் காம்ரேட் படம் மூலம் களம் இறங்குகிறார். இந்த பட விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அவர் அளித்த பேட்டி:
தமிழ் படத்தில் நடிக்க நிறைய கதைகள் கேட்டேன். தமிழை முழுமையாக கற்றுக்கொள்ளாமல் நேரடியான தமிழ் படத்தில் எப்படி நடிப்பது? நோட்டா படத்தில் நடிக்கும்போதே அடுத்த நாள் படப்பிடிப்புக்கான வசனங்களை முதல் நாளே வாங்கி சென்று படித்து மனப்பாடம் செய்துகொள்வேன்.
ஆமாம். நீங்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டால் உங்களுக்கு மகிழ்ச்சியாக தானே இருக்கும். அப்படித்தான் இருக்கிறது. பணம், பின்புலம் எதுவுமே இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்தேன். இன்று எனது ரசிகர்களால் தான் அனைத்துமே கிடைத்துள்ளது. இப்போது அதற்கு எல்லாம் நேரமே இல்லை. சினிமாவில் நடிப்பதற்கே நேரம் போதவில்லை.
தமிழில் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்த பின்னர் அவரது ரசிகனாகி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.