இதில் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், பொருட்கள் கழிவறையின் மேல் வைக்கப்படுவதாகவும், சிலிண்டர் மற்றும் ஸ்டவ் ஆகியவையும் அங்கேயே இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து பேசிய மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி, ´வீட்டில் குளியல் அறையுடன் கழிவறை இணைந்து இருந்தால் உறவினர்கள் உங்கள் வீட்டில் உணவு அருந்த மறுப்பார்களா? குளியல் அறையில் பாத்திரங்கள் வைக்கலாம். நாம் கூட நமது வீடுகளில் பாத்திரங்களை வைத்திருக்கிறோம்.
அந்த அங்கன்வாடி மையத்தில் கழிவறைக்கும், ஸ்டவுக்கும் இடையே இடைவெளி உள்ளது. எனவே, கழிவறைக்குள் சமைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது´ என கூறினார்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரி உரையாற்றுகையில், ´நல்ல முறையில் சமையல் அறை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்´ என தெரிவித்துள்ளார்.