ஆக்ஷன் கிங் என்று அனைவராலும் அழைக்கப்படும் அர்ஜூன் நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் ‘ஜெய்ஹிந்த் 2’ என்ற படம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘ஒரு மெல்லிய கோடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது தமிழ், தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘ராணி ராணாம்மா’ என்ற படத்திலும் அர்ஜுன் நடித்து வருகிறார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளது. இப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடிக்கிறார்.
இப்படத்தில் அர்ஜுன் ஐதராபாத்தில் வாழும் தமிழராக வருகிறார். இலங்கை பெண்ணான ராய் லட்சுமியை அவளது சொந்த ஊரான இலங்கைக்கு அர்ஜூன் பத்திரமாக கொண்டு சேர்ப்பதை கதைக் கருவாக வைத்து உருவாகி வருகிறது.
சமீபத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளிவந்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படம்கூட இதேபோன்ற கதைக்கருவுடன் உருவான படம்தான். வித்தியாசமான கதையம்சத்துடன் வெளிவந்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.
அதேபோல், ‘ராணி ராணாம்மா’ படமும் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.