இங்கிலாந்தின் நார்த்தாம்டன்ஷைர் கவுண்டியின் கெட்டரிங் என்ற இடத்தில் உள்ள A14 என்ற சாலையில், குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காரோட்டிகளைக் கதிகலங்கச் செய்தவர் 43 வயதான மார்டின் கண்ட்ரில்.
இவரது அசுர வேகத்தையும் சாலையில் 360 டிகிரியில் இவர் காரை சுழற்றியதையும் பார்த்து பயந்த ஒருவர் இதை வீடியோவாக எடுத்து போலீசிடம் தகவல் கொடுத்தார்.
சில மணி நேரங்களில் மார்டினைக் கைது செய்த போலீசார் அவரது உடலில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மூன்றரை மடங்கு ஆல்கஹால் இருப்பதை மூச்சு சோதனையில் கண்டுபிடித்தனர். மேலும் காலில் ஷூ கூட இல்லாமல் கொடூர போதையில் இருந்த மார்டினிடமிருந்து ஒரு முழு போத்தல் ஒயினையும் பறிமுதல் செய்தனர்.
பல மாதங்களாக நார்த்தாம்டன்ஷைர் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த வெள்ளிக்கிழமை, மார்டினை 10 மாதங்கள் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்தும், 3 வருடங்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதித்தும் தீர்ப்பளித்தார்.