ஆனால் இந்த படத்தின் பின்னணி பணிகள் தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.
இதேபோல் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ´காப்பான்´ படமும் முதலில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 30-ந் திகதிக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே ஆகஸ்ட் 30 ஆம் திகதி சூர்யாவின் ´காப்பான்´ உள்பட ஒரு சில தென்னிந்திய மொழிப் படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததால் ´சாஹோ´ படக்குழுவினர் சூர்யாவின் ´காப்பான்´ படக்குழு உள்பட ஒருசில படங்களில் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்தனர்.
´சாஹோ´ படக்குழுவினர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ´காப்பான்´ படக்குழுவினர் உள்பட ஒருசில படக் குழுவினர் தங்களது படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இதில் ´காப்பான்´ செப்டம்பர் 20 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பிரபாஸ் உள்பட ´சாஹோ´ படக்குழுவினர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரபாஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: எங்களின் வேண்டுகோளை ஏற்று ரிலீஸ் திகதியை தள்ளி வைத்த அனைத்து படக் குழுவினருக்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.