வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த நிலையில், படம் தொடங்குவதற்கு முன்பே சிம்பு திடீரென நீக்கப்பட்டார். வேரொரு நடிகரை வைத்து மாநாடு படம் புதிய பரிணாமத்தில் உருவாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
மாநாடு படத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் சிம்பு அமைதி காத்து வந்தார். இந்நிலையில், அவரது தந்தை டி.ராஜேந்தர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிம்பு அடுத்ததாக ’மகா மாநாடு’ என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும். சுமார் 125 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ’சிம்பு சினி ஆர்ட்ஸ்’ மூலம் தயாரிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் சிம்பு குடும்பத்துடன் பொங்காக்கிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது ’மகா மாநாடு’ படம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இப்படம் தமிழ் உட்பட 5 மொழிகளில் உருவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.