மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஜலீல் ஷேக் (27) என்பவர் தனது முதல் மனைவியை பிரிந்து கடந்த 2014 ஆம் ஆண்டு பாத்திமா சர்தார் (27) என்ற பெண்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான தம்பதிகள் மேற்கு வங்காளத்தில் இருந்த கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். டெல்லியில் உள்ள சாகர்பூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இதற்கிடையில், ஜலீல் ஷேக் தனது மனைவியை விபச்சாரத்தில் ஈடுபடும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு பாத்திமா சர்தார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜலீல் தனது மனைவியை கடந்த 5 ஆம் திகதி கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாகர்பூரில் உள்ள சமூக கூடம் அருகே வீசி விட்டு தப்பிச் சென்றார்.
இதை அடுத்து, சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிடந்த உடலை ஆகஸ்ட் 6 ஆம் திகதி கைப்பற்றிய பொலிஸார் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என அடையாளம் காண்பதற்காக ஊடகங்களில் விளம்பரம் செய்தனர்.
ஊடகங்களில் வெளியான விளம்பரத்தை கடந்த 17 ஆம் திகதி பார்த்த பாத்திமா சர்தாரின் உறவினர் ஒருவர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட பாத்திமாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பாத்திமா சர்தாரை கொலை செய்த அவரது கணவரை பொலிஸார் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 28) மேற்கு வங்காளத்தில் கைது செய்துள்ளனர்.
தனது இரு சக்கர வாகனத்தை விற்பதற்காக மேற்கு வங்காளத்தில் உள்ள ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த ஜலீல் ஷேக்கை சுற்றி வளத்தை டெல்லி பொலிஸார் அதிரடியாக அவரை கைது செய்தனர்.