அமெரிக்காவின் அலபாமாவில் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை தாம் கொலை செய்ததாக 14 வயது சிறுவர் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்த சிறுவனின் தந்தை, அவரது இரண்டாவது மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
அச்சிறுவன் அவனது குடும்பத்தை கொலை செய்ததற்கான காரணம் குறித்து இன்னும் தெரிய வரவில்லை.
மேலும், அவரது கையில் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.