விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு நேற்று முதல் ஊர்வலாக கொண்டு சென்று கடலில் கரைக்கும் நிகழ்வு நடைபெறுகின்றன.
இதில் கர்நாடகாவின் மங்களூரில் இந்த பண்டிகைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கொங்கனி இசையமைப்பாளரும் பாடகருமான ஜெர்ரி பஜ்ஜோடி நிகழ்ச்சி நடத்தினார். அப்போது மேடையில் பாடிக்கொண்டிருந்த அவர் அப்படியே சரிந்து விழுந்து போனார்.
மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்ற போது உயிர் போய்விட்டதாக கூறியுள்ளனர். அவர் மேடையில் பாடிய போது இறந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.