பூமியில் இருந்து 110 ஒளி ஆண்டு தூரத்தில் அமைந்திருக்கும் கே2-18பி என்ற கிரகத்தில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கே2-18பி கிரகம் பூமியைப் போல் 8 மடங்கு பெரிதானது. பூமியைப் போலவே தட்பவெப்ப நிலையைக் கொண்டது.
இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே, உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலையைக் கொண்டுள்ள, பூமி அல்லாத ஒரே கிரகம் இதுவாகும் என்று நேச்சர் அஸ்ட்ரானமி அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இச்செய்தி விவரிக்கிறது.