இலங்கை இசைத்துறையில் 30 பாடகர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள பாடல், ´தமிழ் எம் உயிர் என்போமே, தமிழால் உயர்வோமே´ என்ற பாடல்.
இதில் முத்தழகு, கலாவதி, செல்லத்துரை, பிறேமானந்த், சிவகுமார், டொனி ஹசன், முருகேஸ், ஜெகதேவி விக்னேஸ்வரன், நித்யகலா, பிரபா, நிலுக்ஷி, மகிந்தகுமார், மொறின் ஜெனற், பவானி, நவகம்புரா கணேஸ், ஜோர்ஜ் ஸ்டண்ட்லி, பிரசாந்தினி, சுபா நிர்மலன், ஷமீரா ஹசன், ஹம்சத்வனி, நிஷா, சகாயம் பெனாண்டோ, றோய் ஜக்ஷன், திருச்செல்வம், நித்யானந்தன், சாஹித்யா கஜமுகன், கிருஷ்ணகுமார், சந்ரு ராஜசூரியர், அனான் மற்றும் வப்பா ஆகிய 30 பாடகர்கள் பாடியுள்ளனர்.
இந்த பாடலுக்கான வரிகள் கவிஞர் அஸ்மின். பாடலில் மிருதங்கம், நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல், மெண்டலின், வீணை என்பன உபயோகிக்கப்பட்டுள்ளமை சிறப்பு.
இலங்கையில் மாத்திரமின்றி இந்திய மண்ணிலும் தன் புகழை பரப்பியுள்ள தமிழ் இசையமைப்பாளரான சுருதி பிரபா இந்த பாடலை வடிவமைத்துள்ளார்.