பிராணிகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் தாண்டி கனடாவில் தொடர்ந்து 37-வது ஆண்டாக பன்றிச் சண்டை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கனடாவின் மாண்ட்ரீல் நகரிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள செயிண்ட் பெர்பெட் என்ற இடத்தில் கடந்த 36 ஆண்டுகளாக ஒரு விநோதமான விஷயம் அரங்கேறி வருகிறது. அங்கு வருடந்தோறும் ‘அசல் பன்றிச் சண்டை’ என்ற விழா நடைபெறும். ரத்தம் தெறிக்கும் இந்த விழாவில் முரட்டுத்தனமான வாலிபர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஒரு பாவப்பட்ட பன்றியை தாக்குவர்.
இதனால் வெறியாகும் பன்றியும் திரும்ப தாக்கும். மாறி மாறி 3 மணி நேரமாக நடைபெறும் இந்த சண்டையில் பன்றியை கொண்டு போய் ஒரு பெரிய வாளிக்குள் போட்டால், வாலிபர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
இந்த வருடத்திற்கான பன்றிச்சண்டை சில தினங்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். கடந்த சில வருடங்களாகவே இந்த நிகழ்ச்சிக்கு பிராணிகள் நல ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது.