இந்தோனீசியாவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதைத் தடை செய்யும் சட்ட முன் வரைவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து இந்தோனேசியா நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.
புதிய சட்டம் ஒன்றின் மூலம் ஊழல் ஒழிப்பு ஆணையத்தையும் அரசு பலவீனப்படுத்த முயல்வதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், “என் கவட்டை அரசுக்குச் சொந்தமானது இல்லை” என்று எழுதி இருந்த பதாகையை ஏந்தி இருந்தார்.
போராட்டக்காரர்களைத் தடுக்க ஜகார்த்தாவில் 5000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.