நடிகர் கவின் மற்றும் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்றபோது காதலிப்பதாக கூறினர்.அந்த நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வேன் என லாஸ்லியா தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் மீண்டும் ஜோடி சேரவுள்ளனர். அவர்களை விஜய் டிவி ராஜா ராணி சீரியலின் இரண்டாம் சீசனில் ஜோடியாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.
இந்த வாய்ப்பை கவின்-லாஸ்லியா ஏற்றுக்கொள்வார்களா? அல்லது சினிமா வாய்ப்புக்காக காத்திருப்பார்களா? – பொறுத்திருந்து பார்ப்போம்.