தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிசின் நாயகி, பாலிவுட்டுக்கு பறந்து போனாராம். அங்கு முதலில் பட வாய்ப்புகள் கிடைத்ததால் பிசியாக நடித்து வந்தாராம். தற்போது அங்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம்.
பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தால் சம்பளம் குறையும் என்ற எண்ணத்தில் கோலிவுட் படங்களிலும் நடிக்க மறுத்து வருகிறாராம். அதனால் தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டாராம். தன்னுடைய பெற்றோர்களிடம் கூறி நல்ல மாப்பிள்ளையை பார்க்க சொல்லியிருக்கிறாராம்.